search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தூத்துக்குடி வாலிபர் கொலை"

    தூத்துக்குடி நடந்த கொடை விழாவில் வாலிபர் குத்திகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியை பிடிக்க போலீசார் தேடி வருகிறார்கள்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி 3 சென்ட் பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் முத்து இருளப்பன் என்ற அஜித்குமார் (வயது 21) கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு ஊருக்கு வந்தார். சம்பவத்தன்று அவர் அந்த பகுதியில் நடந்த கோவில் கொடை விழாவிற்கு சென்று விட்டு, ராஜபாண்டிநகர் கெபி அருகே வந்து கொண்டு இருந்தார்.

    அப்போது அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சங்கர், அவருடைய மகன் பாரதி (23), அவரின் நண்பர்கள் மோகன், நாகராஜ் ஆகியோருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறில் அஜித்குமார் குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் சங்கர், பாரதி உள்ளிட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் சங்கர், பாரதியின் நண்பர் நாகராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் அஜித்குமாரை வாளால் குத்தி விட்டு உயிருக்கு போராடி கொண்டு இருந்த அவரை, அருகே உள்ள ரெயில்வே தண்டவாளம் அருகே போட்டு விட்டு தப்பி சென்றது தெரியவந்தது.

    அஜித்குமார் கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பாரதி மற்றும் நண்பர் மோகன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் 2 பேரையும் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடி வாலிபர் கொலையில் தொடர்புடைய ரவுடியை கைது செய்த போலீசார் மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.
    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணி யார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் வசித்த போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக இருவர் குடும்பத்திற்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    இந்நிலையில் சம்பவத்தன்று கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் தூத்துக்குடி வந்தார். அப்போது அவருக்கும் சங்கரின் மகன் பாரதி என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பாரதி, சங்கர் உள்ளிட்ட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை வாளால் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கர் உள்ளிட்ட 4 பேரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் சங்கரை போலீசார் இன்று கைது செய்தனர். சங்கர் மீது ஏற்கனவே கஞ்சா கடத்தியது உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக தென்பாகம், தெர்மல்நகர் போலீஸ் நிலையங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    அஜித்குமார் கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    தூத்துக்குடியில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதியை சேர்ந்த தொழிலாளி பாலமுருகன். இவரது மகன் அஜித்குமார் (வயது21). கோவையில் தங்கியிருந்து கூலி வேலை பார்த்து வந்தார்.

    பாலமுருகன் இதற்கு முன் தூத்துக்குடி ராஜபாண்டி நகரில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அப்போது அவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த சங்கர் என்பவரின் குடும்பத்தினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து பாலமுருகன் அந்தோணியார்புரம் 3 சென்ட் பகுதிக்கு குடும்பத்துடன் குடி பெயர்ந்தார்.

    இந்நிலையில் கோவையில் வேலை பார்த்து வந்த அஜித்குமார் சமீபத்தில் அங்கிருந்து தூத்துக்குடிக்கு வந்துவிட்டார். அதன்பிறகு கோவைக்கு திரும்பி செல்லாமல் இங்கேயே கூலி வேலை பார்த்து வந்தார். ராஜபாண்டி நகர் பகுதியில் உள்ள கோவிலில் தற்போது திருவிழா நடந்து வருகிறது. அதில் கலந்து கொள்வதற்காக அஜித்குமார் நேற்றிரவு அங்கு சென்றார்.

    திருவிழாவை பார்த்து விட்டு நள்ளிரவு ஒரு மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்து கொண் டிருந்தார். அப்போது ராஜபாண்டி நகரில் உள்ள மாதா கெபி அருகே அமர்ந்து 3 பேர் மது குடித்து கொண்டிருந்தனர்.

    அவர்களில் ஏற்கனவே அஜித்குமாரின் தந்தையுடன் தகராறு செய்து வந்த பக்கத்து வீட்டுக்காரரான சங்கரின் மகன் பாரதி (21) என்பவரும் இருந்தார். அவர்கள் 3 பேரும் அஜித்குமாரை வழிமறித்து ரகளையில் ஈடுபட்டு தாக்கினர். இதனால் ஆத்திரம் அடைந்த அஜித்குமார், ‘உங்களை வெட்ட வீட்டிற்கு சென்று அரிவாளை எடுத்து வருகிறேன்’ என ஆவேசமாக பேசியவாறு அங்கிருந்து வேகமாக சென்றார். இதனால் அதிர்ச்சியடைந்த பாரதி, சம்பவம் குறித்து தனது தந்தை சங்கரிடம் தெரிவித்தார்.

    இதையடுத்து சங்கர், அவரது மகன் பாரதி உள்பட 4 பேர் சேர்ந்து அஜித்குமாரை மடக்கி பிடித்து தாக்கினர். பின்பு தங்களிடம் இருந்த வாளால் அஜித்குமாரை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். பலத்த வெட்டுக்காயம் அடைந்த அஜித்குமார் சம்பவ இடத்தில் உயிருக்கு போராடியபடி கிடந்தார்.

    இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அஜித்குமாரை மீட்டு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

    அஜித்குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரியின் பிணவறையில் வைக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அஜித்குமாரின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு திரண்டு வந்தனர்.

    கொலை நடந்த இடத்தில் தூத்துக்குடி மாநகர துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ், இன்ஸ்பெக்டர் முத்து ஆகியோர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். இந்த கொலை தொடர்பாக சங்கர், பாரதி உள்பட 4 பேர் மீது தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிந்து, தலைமறைவாக உள்ள அவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

    அஜித்குமார் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் ராஜபாண்டி நகர் மற்றும் அந்தோணியார்புரம் பகுதியில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    ×